உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.
நிறைவு நாளான இன்று காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி, அவரது சகோதரர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மொத்தமுள்ள 403 தொகுதிகளில், முதல் கட்டமாக 55க்கு வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறுகிறது.
அடுத்த மாதம் 3ஆம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.