ஒடிசாவில் பயணிகள் இரயில் மீது சரக்கு இரயில் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஒடிசா மாநிலம் ஜார்சுகுடா இரயில் நிலையத்தில் இன்று காலை சம்லேஷ்வரி விரைவு இரயில் நின்று கொண்டிருந்தது. அப்போது, சிக்னலை கவனிக்காத சரக்கு இரயில் ஓட்டுநர் நின்று கொண்டிருந்த சம்லேஷ்வரி விரைவு இரயில் மீது மோதியது.
சரக்கு இரயில் மோதிய வேகத்தில் சங்கேஸ்வரி இரயிலின் 8 பெட்டிகள் சேதம் அடைந்தது. ஒருவர் உயிரிழந்ததாகவும், 9 பேர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் 8 பெட்டிகள் சேதம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து இரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.