Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலநடுக்கம்: சிக்கிமில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2011 (17:36 IST)
கடந்த ஞாயிறன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சிக்கிம் மாநிலத்தில் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் பவன் குமார் தெரிவித்துள்ளார்.

தலைநகர் கேங்டாக்கில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை தெரிவித்த அவர், அடுத்த இரண்டு அல்லது மூன்று தினங்களில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முடிவடைந்துவிடும் என்றார்.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் சுமார் 1 லட்சம் ரூபாய் அளவுக்கு இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக கூறிய அவர், இது தொடர்பான அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, நிதியுதவி கோரப்படும் என்றும் அவர் கூறினார்.

நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், நிலநடுக்கத்தினால் சிக்கிம் மாநிலத்தில் மட்டும் 68 பேர் உயிர ி ழந்திருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

Show comments