Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2ஜி ஊழல்: செப்.15 ல் மூன்றாவது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2011 (18:27 IST)
2 ஜி ஊழல் தொடர்பாக வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

2 ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றம் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் சிபிஐ இதுவரை இரண்டு குற்றப்பத்திரிக்கைகளை தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் 3 ஆவது குற்றப்பத்திரிகையை வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்வதாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், 3 ஆவ்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31 ஆம் தேதி கடைசி தேதி என்ற கெடுவை, மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை முதல் மீன்பிடி தடைகாலம் தொடக்கம்.. இன்றே எகிறிய மீன் விலை..!

ட்ரம்ப் கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி: தனித்து போட்டியா? என்ற கேள்விக்கு சீமான் பதில்

பொன்முடியால் திமுக ஆட்சியை இழக்கலாம்.. உளவுத்துறை அறிக்கை கொடுத்ததா?

ஒரு திருடன் நல்லவனாக மாறிவிட்டால் மன்னிக்க மாட்டோமா.. பாஜக கூட்டணி குறித்து பொன்னையன்..!

திடீரென கண் திறந்த அம்மன் சிலை.. திசையன்விளை கோவிலில் பரபரப்பு..!

Show comments