Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2ஜி ஊழல் விசாரணையில் விஜயமல்லையா, இந்தியா சிமெண்ட்ஸ்

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2011 (13:26 IST)
2 ஜி ஊழலில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கலைஞர் டி.வி.க்கு பணம் கொடுத்தது ஏன்? என்பது குறித்து பிரபல மதுபான தயாரிப்பு நிறுவன தலைவரான விஜய் மல்லையாவின் யுபி குரூப் நிறுவன தலைவர் விஜய மல்லையா மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் ஆகியோரிடம் விளக்கம் கேட்க சிபிஐ முடிவு செய்துள்ளது.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் பயன்பெற்ற டிபி குரூப் நிறுவனம் அளித்த ரூ.200 கோடிக்கும் அதிகமான பணத்தை முதலீடாகக் கொண்டுதான் கலைஞர் டி.வி. தொடங்கப்பட்டது என்று குற்றச்சாட்டு உள்ளது.

இது தொடர்பாக கலைஞர் டி.வி.யின் பங்குதா ரர ் கனிமொழி, கலைஞர் டி.வி. மேலாண்மை இயக்குநர் சரத்குமார் ஆகியோர் கைதாகி சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் அடுத்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் ஜூலை முதல் வாரத்தில் சிபிஐ தாக்கல் செய்யவுள்ளது. இது தொடர்பான விசாரணையின் போது, 2ஜி விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து,டிபி குரூப் நிறுவனத்திடம் தான் வாங்கிய 200 கோடி ரூபாய் பணத்தை கலைஞர் டி.வி. அவசரமாக அவசரமாக வட்டியுடன் சேர்த்து 214 கோடி ரூபாயாக திருப்பி செலுத்தியது.

இவ்வாறு கலைஞர் டி.வி. கடனை திருப்பிச் செலுத்துவதற்கான பணத்தை இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் யுபி குரூப் நிறுவனம் உள்ளிட்ட நான்கு நிறுவனங்கள் கலைஞர் டி.வி.க்கு கொடுத்து உதவியுள்ளது தெரியவந்தது.

எனவே இது தொடர்பாக அந்த நிறுவனங்களிடம் விளக்கம் கேட்க உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் யுபி குரூப் நிறுவனம் தவிர்த்த வேறு இரண்டு நிறுவனங்கள் எவை என்பதை தெரிவிக்க சிபிஐ வட்டாரங்கள் மறுத்துவிட்டன.

இது குறித்து இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனிடம் கேட்டபோது,"சிபிஐ எங்களிடம் விளக்கம் கேட்கவுள்ளதா என்பது குறித்து இதுவரை தனக்கு எதுவும் தெரியாது" என்று தெரிவித்துள்ளார்.

அதேப்போன்று யுபி குரூப் நிறுவன பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிகையில், விளம்பரம் கொடுத்த வகையில்தான் யுபி குரூப் நிறுவனம் கலைஞர் டி.வி.க்கும் பணம் கொடுத்துள்ளது.இதுதவிர வேறு எந்த வகையிலும் அவர்களுக்கும் எங்களுக்கும் கொடுக்கல் வாங்கல் இல்லை. இது தொடர்பாக சிபிஐ எங்களிடம் தொடர்பு கொண்டால், விளக்கம் தருவோம் என்று தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலஸ்தீனர்களுக்கு ஜோர்டானில் இடம், காசாவையும் வளைக்கும் இஸ்ரேல்!? - ட்ரம்ப் முடிவால் அதிர்ச்சி!

ஏழை, எளிய மக்களுக்கு எதுவுமே இல்ல..? பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றம்! - தவெக தலைவர் விஜய்!

மகிழ்ச்சி மற்றும் ஏமாற்றம்.. மத்திய பட்ஜெட் குறித்து அன்புமணி ராமதாஸ்..!

சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் நாடு கடத்தல்.. காவல்துறை உயர் அதிகாரி தகவல்..!

குழந்தை பெற்று குப்பை தொட்டியில் வீசிய கல்லூரி மாணவி: தஞ்சை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

Show comments