Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜார்கண்ட்: 4 மாவோயிஸ்டுகளுக்கு தூக்கு தண்டனை

Webdunia
வியாழன், 23 ஜூன் 2011 (18:43 IST)
ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் 4 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதியன்று சில்காரி என்ற இடத்தில், கலை நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டு இருந்த முன்னாள் முதலமைச்சர் பாபுலால் மராண்டியின் மகன் அனுப் உள்பட 20 பேரை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றனர்.

இது தொடர்பாக 10 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிரான வழக்கு கிரிதிக் 1-வது கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி டி.மிஸ்ரா, குற்றம் சாட்டப்பட்டவர்களில் சத்ரபதி மண்டல், மனோஜ் ராஜ்வார், ஜிதேன் மராண்டி, அனில் ராம் ஆகிய 4 மாவோயிஸ்டுகளுக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

மற்ற 6 மாவோயிஸ்டுகள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவர்களை விடுதலை செய்வதாக அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலஸ்தீனர்களுக்கு ஜோர்டானில் இடம், காசாவையும் வளைக்கும் இஸ்ரேல்!? - ட்ரம்ப் முடிவால் அதிர்ச்சி!

ஏழை, எளிய மக்களுக்கு எதுவுமே இல்ல..? பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றம்! - தவெக தலைவர் விஜய்!

மகிழ்ச்சி மற்றும் ஏமாற்றம்.. மத்திய பட்ஜெட் குறித்து அன்புமணி ராமதாஸ்..!

சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் நாடு கடத்தல்.. காவல்துறை உயர் அதிகாரி தகவல்..!

குழந்தை பெற்று குப்பை தொட்டியில் வீசிய கல்லூரி மாணவி: தஞ்சை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

Show comments