Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லோக்பால் மசோதா வரைவு குழு கூட்டம் தோல்வி

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2011 (19:36 IST)
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா வரைவு தொடர்பாக அரசு தரப்பு மற்றும் குடிமக்கள் பிரதிநிதிகள் குழுவினருக்கு இடையே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் ஒருமித்த கருத்து எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது.

லோக்பால் மசோதா வரைவு தொடர்பான அம்சங்களில் 85 விழுக்காடு நிறைவடைந்துவிட்டதாகவும், ஒரு சில முக்கிய விடயங்களில், குறிப்பாக லோக்பால் மசோதா வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என்பதில் கருத்துவேறுபாடு நிலவுவதாகவும், அரசு தரப்பு பிரதிநிதிகளில் ஒருவரான மத்திய அமைச்சர் கபில் சிபல் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிக்கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய விடயங்களில் இருதரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்படாததால், ஒருமித்த லோக்பால் மசோதா வரைவு உருவாகாமல் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.

கூட்டம் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கபில் சிபல், எட்டு முக்கிய பிரச்சனைகளில் இருதரப்புக்குமிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளை தீர்க்க முடியவில்லை என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலஸ்தீனர்களுக்கு ஜோர்டானில் இடம், காசாவையும் வளைக்கும் இஸ்ரேல்!? - ட்ரம்ப் முடிவால் அதிர்ச்சி!

ஏழை, எளிய மக்களுக்கு எதுவுமே இல்ல..? பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றம்! - தவெக தலைவர் விஜய்!

மகிழ்ச்சி மற்றும் ஏமாற்றம்.. மத்திய பட்ஜெட் குறித்து அன்புமணி ராமதாஸ்..!

சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் நாடு கடத்தல்.. காவல்துறை உயர் அதிகாரி தகவல்..!

குழந்தை பெற்று குப்பை தொட்டியில் வீசிய கல்லூரி மாணவி: தஞ்சை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

Show comments