Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்கவுண்டர் வழக்கு: குஜராத் காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2011 (19:14 IST)
போலி என்கவுண்டரில் ஒருவரை சுட்டுக்கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் குஜராத் மற்றும் மகாராஷ்ட்ரா காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் அடுத்த நரோடா பகுதியில் கடந்த 2003 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் தேதி சாதிக் ஜமால் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இது போலி என்கவுண்டர் என்று குற்றம்சாட்டிய அவரது சகோதரர் சபீர் ஜமால் மெக்தர், குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த என்கவுண்டரில் சம்பந்தப்பட்ட குஜராத் மற்றும் மகாராஷ்டிரா காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு அகமதாபாத் காவல்துறையின் குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து மேற்கூறிய என்கவுண்டரில் தொடர்புடைய இரு மாநில காவல்துறையினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

74 மணி நேர ED ரெய்டு முடிவு! கே.என்.நேரு சகோதரர் வீட்டில் சிக்கியது என்ன?

அதிகரிக்கும் சுற்றுலா கூட்டம்..! சென்னை - கன்னியாக்குமரி சிறப்பு ரயில் அறிவிப்பு!

மணமகள் தேடும் இளைஞர்களுக்கு இளம்பெண்களை விற்ற கும்பல்.. 1500 பெண்கள் விற்கப்பட்டார்களா?

ராமேஸ்வரம் பள்ளியில் AI ஆசிரியர்.. மாணவர்களின் கேள்விகளுக்கு அசத்தல் பதில்..!

தாய் உயிரிழப்பு.. தந்தை மருத்துவமனையில்.. மகள் திருமண தினத்தில் நடந்த சோகம்..!

Show comments