ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் லோக்பால் மசோதா நிறைவேறாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவேன் என்று சமூக சேவகர் அண்ணா ஹசாரே கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அனைத்து அரசியல் கட்சிகளும் லோக்பால் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்கும் என நம்புவதாகக் கூறியுள்ளார்.
ஒருவேளை, லோக்பால் மசோதாவை நிறைவேற்றவிடாமல் சில கட்சிகள் தடுத்தால் அதை எதிர்த்து மக்களைத் திரட்டி மீண்டும் போராடுவோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
லோக்பால் மசோதாவை வரையறுக்க 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் அரசு பிரதிநிதிகள் 5 பேரும், மக்கள் பிரதிநிதிகள் 5 பேரும் இடம்பெற்றுள்ளனர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.