Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லோ‌‌க்பா‌‌ல் மசோதா: பிரதமருடன் சோனியா சந்திப்பு

லோ‌‌க்பா‌‌ல் மசோதா: பிரதமருடன் சோனியா சந்திப்பு
புதுடெல்லி , வெள்ளி, 8 ஏப்ரல் 2011 (11:49 IST)
லோக்பால் மசோதா விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் சோனியா காந்தி சந்தித்து பேசினார்.

ஊழலுக்கு எதிராகவும், லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தியும் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வரும் அ‌ண்ணா ஹசாரே போராட்டம் இன்று 4வது நாளாக தொடர்கிறது.

உண்ணாவிரதத்தை கைவிடுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அ‌ண்ணா ஹசாரேக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

இந்த பிரச்சனையில் நான் முழு கவனம் செலுத்தி, தேவையான ஆக்கபூர்வமான, சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றும் கூறி இருந்தார்.

இந்தநிலையில் லோக்பால் மசோதா விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கை இ‌ன்று கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் சோனியா காந்தி சந்தித்து பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil