Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'2ஜி ஊழலில் ராசா ரூ.3,000 கோடி லஞ்சம் பெற்றார்'

'2ஜி ஊழலில் ராசா ரூ.3,000 கோடி லஞ்சம் பெற்றார்'
புதுடெல்லி , வெள்ளி, 11 பிப்ரவரி 2011 (12:35 IST)
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மத்திய முன்னாள் தொலை தொடர்பு துறை அமைசர் ஆ.ராசா ரூ.3,000 கோடி வரை லஞ்சமாக பெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக டெல்லி வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகி உள்ளது.

2ஜி ஊழல் குறித்து மத்திய புலனாய்வுக் கழகமான சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குனரகம் நடத்திய கூட்டு விசாரணையில் இந்த விவரம் தெரியவந்துள்ளதாக அந்த இரு அமைப்புகளும் தயாரித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை உரிமங்களை மிக மலிவான விலைக்கு ஒதுக்கீடு செய்ததால், அரசு கஜானாவுக்கு ரூ.40,000 முதல் 50,000 வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளதாக டெல்லியிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil