Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ம.பு.க. புதிய இயக்குனராக அமர் பிரதாப் சிங் நியமனம்

ம.பு.க. புதிய இயக்குனராக அமர் பிரதாப் சிங் நியமனம்
, செவ்வாய், 30 நவம்பர் 2010 (16:11 IST)
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, ஆதர்ஷ் குடியிருப்பு, காமன்வெல்த் விளையாட்டு ஆகியன தொடர்பான ஊழல்களை விசாரித்துவரும் மத்திய புலனாய்வுக் கழகத்தின் (சிபிஐ) புதிய இயக்குனராக இந்திய காவல் பணி அதிகாரியான அமர் பிரதாப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

1974ஆம் ஆண்டு இந்திய காவல் படைக்கு ஜார்க்கண்ட் பிரிவில் இணைந்த அமர் பிரதாப் சிங்கை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு தேர்வு செய்துள்ளது.

அமர் பிரதாப் சிங் தற்போது ம.பு.க.வின் சிறப்பு இயக்குனராக பணியாற்றி வருகிறார். சிறந்த பணிக்காக இந்திய காவல் பதக்கத்தையும், குடியரசுத் தலைவர் பதக்கத்தையும் பெற்றவர்.

2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ம.பு.க.இயக்குனராக இருந்த அஸ்வானி குமார் இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil