Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காந்தி பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை

காந்தி பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை
, சனி, 2 அக்டோபர் 2010 (15:20 IST)
மகாத்மா காந்தியின் 141வது பிறந்த நாளான இன்று அவரது சமாதியில் மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியில் குடியரத் தலைவர் பிரதீபா பாட்டீல், குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இவர்களைத் தொடர்ந்து பா.ஜ.க. தலைவர் எல்.கே. அத்வானி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, முதல்வர் கருணாநிதி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் பல்வேறு தலைவர்களும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Share this Story:

Follow Webdunia tamil