அயோத்தி வழக்கு தீர்ப்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது நியாயப்படுத்தப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை தெரிவித்த அவர், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் தற்போதைய நிலையே தொடரவும், நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதையும் தவிர மத்திய அரசுக்கு தற்போது வேறு எந்த பங்கும் இல்லை என்றார்.
அலகாபாத் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஒரு முக்கியமான ஆவணம்.ஆனால் அது செயல்படத்தக்கதல்ல.தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படலாம் என்பது ஒரு நியாயமான யூகம்தான் என்றும் அவர் மேலும் கூறினார்.