Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கானாவிற்கு எதிர்ப்பு: சிரஞ்சீவி நாளை உண்ணாவிரதம்

Webdunia
புதன், 16 டிசம்பர் 2009 (17:51 IST)
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாக நடிகரும், பிரஜா ராஜ்யம் கட்சியின் தலைவருமான சிரஞ்சீவி அறிவித்துள்ளார்.

அதன்படி திருப்பதியில் நாளை சிரஞ்சீவி உண்ணாவிரதம் இருக்கிறார்.

தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரஜா ராஜ்யம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் ஏற்கனவே பதவி விலகல் கடிதத்தை அளித்தனர். ஆனால், எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதம் இதுவரை ஏற்கப்படவில்லை.

தெலுங்கானா மாநிலத்திற்கு ராயலசீமா, கடலோர ஆந்திரப் பகுதிகளில் கடும் எதிர்ப்பு நீடித்து வருகிறது.

இந்நிலையில் சிரஞ்சீவியின் உண்ணாவிரத அறிவிப்பால் போராட்டம் தீவிரம் அடையும் என்று தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

Show comments