Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜார்க்கண்டில் வன்முறையுடன் முடிந்த முழு அடைப்பு

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2009 (12:15 IST)
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கடந்த 2 நாட்களாக மேற்கொண்ட முழு அடைப்பு போராட்டம், வன்முறையுடன் முடிவுக்கு வந்துள்ளது.

தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் காயம் அடைந்தனர். சத்ரா என்ற இடத்தில் சிறிய பாலம் ஒன்றை தகர்த்த மாவோயிஸ்ட் அமைப்பினர், 4 வாகனங்களுக்கும் தீவைத்தனர்.

இந்த வன்முறைக்குப் பிறகு தீவிரவாதிகளின் 2 நாள் போராட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

புயான்டி என்ற இடத்தில் லாரி ஓட்டுனர் மற்றும் உதவியாளரை நோக்கி மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து நேற்றுடன் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் 2 நாள் முழு அடைப்பு போராட்டம் முடிவுக்கு வந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

இதே பகுதியில் சிறிய பாலம் ஒன்றை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் குண்டுவைத்து தகர்த்ததுடன், வாகனங்களுக்கும் தீவைத்து கொளுத்தினர்.

மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கிய நபரான அசோக் மகாதோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வலியுறுத்தி இந்த போராட்டத்தை அவர்கள் நடத்தினர். ஆனால் அதுபோன்ற யாரையும் கைது செய்யவில்லை என காவல்துறை மறுத்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

Show comments