Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜார்க்கண்டில் 2 பேரைக் கொன்ற மாவோயிஸ்ட்

Webdunia
சனி, 24 அக்டோபர் 2009 (13:41 IST)
ஜார்க்கண்ட் மாநிலம் பலமு மாவட்டத்தில் காவல்துறையினருக்கு உளவு தெரிவிப்பவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கிராம மக்கள் 3 பேரை கடத்திச் சென்ற மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் 2 பேரைக் கொலை செய்துள்ளர். மற்றொருவர் கதி என்னவென்று தெரியவில்லை.

சண்டோ கிராமத்தைச் சேர்ந்த 3 பேரை நேற்றிரவு கடத்திச் சென்ற தீவிரவாதிகள் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் கொண்டு சென்றதாகவும், இன்று காலை 2 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மற்றொருவர் என்ன ஆனார்? என்ற விவரம் தெரியவில்லை.

அவர்கள் காவல்துறையினருக்கு உளவு சொன்னதாக மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கருதியதன் பேரிலேயே அவர்களைக் கொலை செய்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

Show comments