Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜசேகர ரெட்டி இறுதி ஊர்வலம் தொடங்கியது

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2009 (16:20 IST)
ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் உடல் ஹைதராபாத்தில் இருந்து அவரது சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டது.

பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்த மைதானத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் ராஜசேகர ரெட்டியின் உடல் கொண்டு செல்லப்பட்டது.

ஹெலிகாப்டரில் இருந்து ராணுவ பீரங்கி வண்டியில் அவரது உடல் ஏற்றப்பட்டு, உடல் அடக்கம் நடைபெறும் இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் `அமரர் ஒய்.எஸ்.ஆர்.' என கோஷம் எழுப்பினார்கள்.

இறுதி ஊர்வலத்தில் மாநிலத்தின் இடைக்கால முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள கே. ரோசையா, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

Show comments