Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் ஹெலிகாப்டர் மாயம்?

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2009 (15:29 IST)
ஹைதராபாத்தில் இருந்து ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர், சித்தூர் மாவட்டத்திற்கு செல்லும் வழியில் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று காலை 8.45 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர் ராஜசேகர ரெட்டியின் விமானம் திட்டமிட்டபடி 10.40 மணிக்கு சித்தூர் மாவட்டத்திற்கு சென்றடைய வேண்டும்.

ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் முதல்வரின் ஹெலிகாப்டர் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முதல்வரின் விமானத்தைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

துவக்கத்தில் முதல்வரின் ஹெலிகாப்டர் கர்னூல் மாவட்டத்தில் அவசரமாகத் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இத்தகவலை சித்து மாவட்ட காவல்துறை துணை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் மறுத்ததால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முதல்வர் ராஜசேகர ரெட்டி பாத்திரமாக இருக்கிறாரா? என்பது குறித்த தகவலை ஆந்திர அரசு அதிகாரிகள், காவல்துறையினர் இதுவரை உறுதி செய்யாததால் அம்மாநிலம் முழுவதும் பரபரப்பு நீடித்து வருகிறது.

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

Show comments