Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் தொடர்கிறது கனமழை: பலி 41 ஆக உயர்வு

Webdunia
ஞாயிறு, 19 ஜூலை 2009 (10:53 IST)
கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் வடக்கு மாவட்டங்களான வயநாடு, கோழிகோடு, கண்ணூர், பாலக்காடு, திருச்சூர் ஆகிய 5 மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தில் கடந்த 15 நாட்களாகப் பெய்து வரும் பருவமழைக்கு இதுவரை 30 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் 11 பேர் பலியானதால், அந்த எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

திருச்சூர்-சாலக்குடி ரயில் பாதையில் மலையில் இருந்து பாறைகள் உருண்டு விழுந்ததால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வயநாட ு, மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழந்துள்ளது. மழையால் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Show comments