Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளுக்கு 6 % வட்டியில் கடன்

Webdunia
திங்கள், 6 ஜூலை 2009 (13:29 IST)
நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தங்களின் பயிர்க்கடன்களை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தும் நிலையில், அவர்களுக்கு 6 விழுக்காடு மானிய வட்டியில் பயிர்க்கடன் அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருக்கிறார்.

இது ஏனைய விவசாயிகளுக்கு வழங்கப்படும் 7 விழுக்காடு வட்டியை விடவும் ஒரு விழுக்காடு குறைவாகும் என்றார் அவர்.

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

குறுகிய கால பயிர்க்கடன்களை திட்டமிடப்பட்ட காலத்திற்குள் வங்கியில் செலுத்தி வரும் விவசாயிகளுக்கு ஒரு விழுக்காடு சலுகை வட்டியில் கடன் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதற்காக இந்த ஆண்டு 411 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் பிரணாப் முகர்ஜி கூறினார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments