Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேளாண் கடன் இலக்கு ரூ 3.25 லட்சம் கோடி

Webdunia
திங்கள், 6 ஜூலை 2009 (19:48 IST)
2009-10 ஆம் ஆண்டில் வேளாண் கடனுக்கு ரூ.3,25,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ‌ இ‌ன்று தா‌க்க‌ல் செ‌ய்த ‌நி‌‌தி‌நிலை அ‌றி‌க்கை‌யி‌ல் பிரணாப் முகர்ஜி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து அவ‌ர் மேலு‌ம் கூ‌றியதாவது :

2009-10 ஆண்டில் ரூ.3,25,000 கோடி வேளாண் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2008-09 ஆம் ஆண்டில் இது 2,87,000 கோடியாக இருந்தது. இந்த இலக்கை எட்டுவதற்காக ரூ.3 லட்சம் வரையில் குறுகிய கால கடன் பெறும் விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு 7 சதவீத அளவுக்கு குறைந்த அளவில் வட்டி நிர்ணயிக்கும் திட்டம் தொடரப்படும்.

மேலும் இந்த கடனை உரிய காலத்திற்குள் திருப்பி செலுத்துவோருக்கு கூடுதலாக ஒரு சதவீத வட்டியை குறைக்கும் வகையில் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இதன் மூலம் அவர்களின் கடனுக்கான வட்டி 6 சதவீதமாக இருக்கும். இதற்காக இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் மேலும் ரூ.411 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளத ு எ‌ன்று ‌பிரணா‌ப் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments