இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9% உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு செலவிடப்படும் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
2009-10 ஆம் நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கையை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்யத் துவங்கியுள்ளார்.
உலகளாவிய அளவில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவின் காரணமாக இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2008-09ஆம் ஆண்டில் குறைந்துள்ளது என்று பிரணாப் கூறினார். உலகப் பொருளாதாரப் பின்னடைவு காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் குறைந்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க எல்லா வழிகளிலும் முயற்சி மேற்கொள்ளப்படும்.
இந்தப் பக்கம் இடுகைகள் கூட்டப்படும்போது தானாகவே புதுப்பித்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
2008-09 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.7 விழுக்காடாக இருந்தது, இதனை 9 விழுக்காடு அளவிற்கு மேம்படுத்த உரிய பொருளாதார திட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தும்.
இளைஞர்களின் எதி்ர்பார்பை அதிகரிக்க நினைக்கிறேன் என்று கூறிய அமைச்சர் பிரணாப், ஆண்டிற்கு 1.2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார்.
நமது நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்கட்தொகையை குறைக்க வேண்டும்.
விவசாய உற்பத்தி வளர்ச்சியை ஆண்டிற்கு 4 விழுக்காடு அளவிற்கு உயர்த்த வேண்டும ் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்கவிக்கும் சக்தியாக தனியார் முதலீடு இருக்கும்.
எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய அது தொடர்பான அனைத்து கொள்கைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும்.
2008-09 நிதியாண்டில ் அன்னிய நேரடி முதலீடு வரத்து குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது.