Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் ரூ. 4, டீசல் ரூ. 2 விலை உயர்த்தப்பட்டது

Webdunia
புதன், 1 ஜூலை 2009 (19:31 IST)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வைத் தொடர்ந்து, இந்தியாவில் பெட்ரோல் லிட்டருக்கு 4 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளன.

webdunia photoFILE
இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு (புதன்கிழமை) முதல் அமலுக்கு வரும் என்று பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

என்றாலும் மண்ணெண்ணெய், சமையல் எரிவாயுவின் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், அவற்றின் விற்பனையில் ஏற்படும் மானியத்தை அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் முரளி தியோரா கூறினார்.

மண்ணெண்ணெய் லிட்டருக்கு 15.26 ரூபாயும், எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 92.96 ரூபாயும் இழப்பு ஏற்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீண்டும் பதவியேற்ற பின் முதல்முறையாக பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

Show comments