Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பன்றிக்காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது - ஆசாத்

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2009 (11:39 IST)
இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் நோய் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் இந்த நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்ட 30 பேரில் 11 பேர் சிகிச்சைக்குப்பின் குணமடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் கூறியிருக்கிறார்.

புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்நோய் முற்றிலும் குணப்படுத்தக்கூடியது என்றும் இதற்கான மருந்துகள் இந்தியாவில் இருப்பதாகவும் கூறினார்.

இந்தியாவின் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்புக்குள்ளாகி இருப்போர் எண்ணிக்கை மிகமிகக் குறைவு என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்நோய் உலக அளவில் முற்றிலுமாக ஒழிக்கப்படும்வரை இந்தியர்கள் அதிக அளவில் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அமைச்சர், அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் நிலைமை சீரடைந்துவிடும் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

Show comments