Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4வது கட்டத் தேர்தல்: 57% வாக்குப் பதிவு!

Webdunia
வியாழன், 7 மே 2009 (20:40 IST)
மேற்கு வங்கம், பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 85 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று நடந்த தேர்தலில் 57 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது.

மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 75 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மிக குறைந்த அளவாக 24 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது என்று தலைமைத் தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் ஆர். பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் 65 விழுக்காடு, ஹரியானாவில் 63 விழுக்காடு, இராஜஸ்தான், டெல்லி, உத்தரப் பிரதேச மாநிலங்களில் 50 விழுக்காடு, பீகாரில் 37 விழுக்காடு என்று வாக்குகள் பதிவாகியுள்ளது.

இது வாக்குப் பதிவு முடிந்தவுடன் கிடைத்த விவரங்களின் அடிப்படையிலானது என்று கூறிய பாலகிருஷ்ணன், காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில்தான் மிக மிகக் குறைவாக பதிவாகியுள்ளது என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

வனக் கல்லூரியில் 27-வது மாநில அளவிலான வனத்துறை விளையாட்டுப் போட்டியை - வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்!

Show comments