Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல் சூழ்ச்சிக்கு பலியானேன்: வருண் காந்தி

Webdunia
புதன், 18 மார்ச் 2009 (17:42 IST)
உத்தரப்பிரதேச மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் பிலிபித் தொகுதியில் போட்டியிடும் வருண் காந்தி, தாம் அரசியல் சூழ்ச்சிக்கு பலியானதாக தெரிவித்துள்ளார்.

பிலிபித் தொகுதியில் சிறுபான்மையினருக்கு எதிராக தாம் பேசியதாக கூறப்படும் வீடியோ காட்சி ஜோடிக்கப்பட்டது எனக் கூறிய அவர், ஆதரமாகக் காட்டப்படும் வீடியோவில் பதிவாகியுள்ள குரல் தன்னுடையது அல்ல என்றார். எனவே மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்தார்.

தன்னை மதவாதி என்று சாயம்பூசத் திட்டமிட்டுள்ளதாகவும், சிறுபான்மையினருக்கு எதிராக தாம் தவறான வார்த்தைகள் எதையும் பிரசாரத்தின் போது பயன்படுத்தவில்லை என்றும் வருண் காந்தி கூறியுள்ளார்.

பிலிபித் தொகுதியில் சமீபத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தின் போது சிறுபான்மையினருக்கு எதிராக கருத்துத் தெரிவித்ததாக கூறப்பட்ட புகாருக்கு தேர்தல் ஆணையம் அவரிடம் விளக்கம் கேட்டது. இதுமட்டுமின்றி அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன் காரணமாக வருண் காந்தி எந்த நேரமும் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெரும் சேதம்: ஆற்றில் உள்ள சிவன் சிலை மூழ்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு..!

மழையில் நனைந்து கொண்டு செல்போன் பேசலாமா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சீதை பிறந்த நகரின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.887 கோடி. முதல்வர் நிதிஷ்குமார் ஒப்புதல்..!

வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் திட்டம்.. ஈபிஎஸ் வீட்டுக்கும் செல்வாரா முதல்வர்? அவரே கூறிய பதில்..!

Show comments