Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமருடன் பான்-கி-மூன் தொலைபேசியில் பே‌ச்சு

Webdunia
புதன், 3 டிசம்பர் 2008 (18:03 IST)
பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இன்று தொலைபேசியில் பேசிய ஐ.நா பொதுச் செயலர் பான்-கி-மூன், மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்ற கருத்தை ஆமோதித்ததுடன், அதற்கான நடவடிக்கைகளுக்கு ஐ.நா. உதவிடும் எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஐ.நா தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமரை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட பான்-கி-மூன், மும்பை தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அதில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததாக கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இந்த உரையாடலின் போது, மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியவர்களையும், அதற்கு துணை நின்றவர்களையும் சட்டத்தின் முன்பு நிறுத்துவது கடினமான பணி என்றாலும், அதனை நிறைவேற்ற அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

மும்பை தாக்குதலின் போது இந்திய மக்களின் தைரியமும், அத்தாக்குதலில் இருந்து மீளும் தன்மையும் பாராட்டக் கூடிய வகையில் இருந்ததாகவும் பான்-கி-மூன் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆனால் முதல் கையெழுத்து பெண்களை தாலியை அறுக்காத அளவுக்கு நான் பார்த்துக்கொள்வேன் என சொன்னார்கள் அது என்ன ஆச்சு- அதிமுக அமைப்பு செயலாளர் சுதா.கே.பரமசிவன் கேள்வி!

திமுகவினர் நடத்திய பொதுக்குழு உறுப்பினர் கூட்டத்தில் பிரியாணிக்காக அடி உதை!

மாமன்னன் உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவி கொடுப்பார் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்!

2026 தேர்தலில் MIC இல்லை..! வேறு சின்னத்தில் போட்டி - சீமான்.!!

நான் தோல்வியடைந்தால் இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும்.! டிரம்ப் பேச்சால் பரபரப்பு..!!

Show comments