Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானியர்கள்?

Webdunia
வியாழன், 27 நவம்பர் 2008 (15:33 IST)
மும்பை பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்களில் சிலர், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மும்பையில் பயங்கரவாத செயலை நடத்த படகுகள் மூலம் வந்தவர்களில் சிலர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவல்துறையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் பிடிபட்ட பயங்கரவாதிகளிடம் நடத்திய விசாரணையில் இத்தகவல் தெரியவந்துள்ளது.

எனினும் பயங்கரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதை மராட்டிய துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீல் உறுதிப்படுத்தவில்லை.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, பயங்கரவாதிகள் யார், எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த செய்திகள் அரசிடம் இருந்தாலும், அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பிணையக் கைதிகள் விடுதலை செய்யப்படும் வரை அதுகுறித்து தெரிவிக்கப்படாது. இதனைத் தெரிவிக்க வேண்டிய தருணத்தில் நிச்சயம் வெளியிடுவோம் என்று பதிலளிதார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

வளர்ப்பு நாய் கடித்ததால் உயிரிழந்த தந்தை மற்றும் மகன்! ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!

பேருந்தில் பயணம் கர்ப்பிணி பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி.. அழகிய ஆண் குழந்தை பிறந்தது..!

திடீரென 11 நாள் உண்ணாவிரதம் இருக்கும் துணை முதல்வர் பவன் கல்யாண்.. என்ன காரணம்?

Show comments