Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானியர்கள்?

Webdunia
வியாழன், 27 நவம்பர் 2008 (15:33 IST)
மும்பை பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்களில் சிலர், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மும்பையில் பயங்கரவாத செயலை நடத்த படகுகள் மூலம் வந்தவர்களில் சிலர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவல்துறையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் பிடிபட்ட பயங்கரவாதிகளிடம் நடத்திய விசாரணையில் இத்தகவல் தெரியவந்துள்ளது.

எனினும் பயங்கரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதை மராட்டிய துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீல் உறுதிப்படுத்தவில்லை.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, பயங்கரவாதிகள் யார், எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த செய்திகள் அரசிடம் இருந்தாலும், அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பிணையக் கைதிகள் விடுதலை செய்யப்படும் வரை அதுகுறித்து தெரிவிக்கப்படாது. இதனைத் தெரிவிக்க வேண்டிய தருணத்தில் நிச்சயம் வெளியிடுவோம் என்று பதிலளிதார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Show comments