Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவு‌ப் பொருட்களின் தரத்தை உயர்த்த நடவடிக்கை!

Webdunia
செவ்வாய், 25 நவம்பர் 2008 (23:23 IST)
தெருக்களில் உள்ள உணவு அங்காடிகளின் மூலம் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை மேம்படுத்த பதினேராவது ஐந்தாண்டு திட்டத்தில் பல நடவடிக்கைகளை மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கான அமைச்சகம் எடுத்துள்ளது.

அதே நேரத்தில ், உணவுப் பொருட்களை தெரு அங்காடிகளில் விற்கும் வியாபாரிகளின் நலன ை பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்த அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

பாதுகாப்பான உணவுப் பொருட்களை அளிப்பதற்கு இதற்கான நகரங்களை உருவாக்குவது, தெரு அங்காடிகளில் உணவுப் பொருட்களை சிறந்த முறையில் விற்பதற்கான சிறப்பு முயற்சிகளை மேற்கொள்வது ஆகிய 2 திட்டங்களை இந்த அமைச்சகம் உருவாக்கியுள்ளது.

இந்த திட்டத்தின்படி தெரு அங்காடிகளில் உணவுப் பொருட்களை விற்பவர்களில் 1,000 பேர்களை சில நகரங்களில் இருந்து தே‌ர்‌ந்தெடு‌த்து அவர்களுக்கு பயிற்சி மற்றும் நிதியுதவி ஆகியவை அளிக்கப்படுகின்றன. அவர்கள் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல வண்டி மற்றும் காப்பீட்டு தொகை ஆகியவையும் வழங்கப்படுகின்றன. 2008-09ஆம் ஆண்டு ஆக்ரா, ட ெல்லி உட்பட 9 நகரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

தற்போதுள்ள உணவு அங்காடிகளை மேம்படுத்தி கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுகிறது. மின் வசதி மற்றும் நவீன மின்சார இயந்திர கருவிகளை வழங்குவது, பாதுகாப்பான குடிநீர் அளிப்பது ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும். 2008-09ஆம் ஆண்டு இத்திட்டத்தை செயல்படுத்த திருப்பதி, வாரணாசி ஆகிய 2 நகரங்கள் தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments