Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாகும் வரை திபெத்திற்கு போராடுவேன்: தலாய் லாமா!

Webdunia
ஞாயிறு, 23 நவம்பர் 2008 (12:53 IST)
திபெத் மதத் தலைவராக உள்ள தலாய் லாமா விரைவில் பதவி விலகுவார் என்று வெளியான செய்திகளை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக தர்மசாலாவில் இன்று செய்தியாளர்களுக்கு தலாய் லாமா அளித்துள்ள பேட்டியில், திபெத் போராட்டத்தை வழிநடத்திச் செல்லும் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. சாகும் வரை திபெத்தியர்களை வழிநடத்திச் செல்வது எனக்கான தார்மீகப் பொறுப்பாகும்.

எனது உடலும், உயிரும் திபெத்தியர்களுக்கே சொந்தமானது என்று தலாய் லாமா திட்டவட்டமாக கூறினார்.

கடந்த ஆறு நாட்களாக சுமார் 600க்கும் அதிகமான திபெத்திய தலைவர்கள் பங்கேற்ற மாநாடு தர்மசாலாவில் வெற்றிகரமாக நிறைவடைந்ததற்கு பின்னர் தாம் பதவி விலகுவதாக வெளியான செய்திகளுக்கு தலாய் லாமா மறுப்புத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

Show comments