Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஷ்டிர அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது!

Webdunia
திங்கள், 10 நவம்பர் 2008 (13:11 IST)
மகாராஷ்டிராவில் வாழும் பிற மாநில மக்கள் மீது ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியினர் நடத்திய தாக்குதல் எதிரொலியாக தொடரப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அம்மாநில அரசுக்கு தாக்கீது அனுப்பியுள்ளது.

மகாராஷ்டிராவில் வாழும் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து டெல்லியைச் சேர்ந்த வணிகர் சலேக் சாந்த் ஜெய்ன் தொடர்ந்துள்ள வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச், கலவரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என தாக்கீது வழங்கியுள்ளது.

வடஇந்தியர்கள் மீதான தாக்குதலை தடுக்கத் தவறிய மாநில அரசுக்கு, அரசியல் சட்டம் 355ன் கீழ் அம்மாநில அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்றும், மகாராஷ்டிர நவநிர்மான் சேனாவின் இந்த தாக்குதலால், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், ஒற்றுமைக்கும் பங்கம் ஏற்படுகிறது என்றும் சலேக் சாந்த் தனது மனுவில் கூறியிருந்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

Show comments