Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரஞ்சீவி கட்சியுடன் கூட்டணியா? பாஜக பதில்

Webdunia
புதன், 5 நவம்பர் 2008 (23:01 IST)
ஆந்திர மாநிலத்தில் சிரஞ்சீவி தலைமையிலான பிரஜா ராஜ்யம் கட்சியுடன் பாஜக கூட்டணி ஏதும் வைத்துக் கொள்ளவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பண்டாரு தத்தாத்ரேயா கூறியிருக்கிறார்.

திருப்பதியில் புதனன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆந்திர மாநிலத்தைப் பொருத்தவரை சிரஞ்சீவி தொடங்கியுள்ள பிரஜா ராஜ்யம் கட்சியுடன் பாஜக கூட்டு சேர்வதற்கான வாய்ப்பே இல்லை என்று கூறினார்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பொடா சட்டம் மீண்டும் அமலுக்கு வரும் என்று அவர் கூறினார்.

ஜனநாயகத்தை காக்கவும், இந்திய கலாச்சாரத்தை நிலை நாட்டவும் கூடிய ஒரே கட்சி பாஜக மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, திருப்பதி திருமலை வெங்கடேசப் பெருமாள் கோயிலில் புதனன்று தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments