Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் குண்டுவெடிப்பு: 13வயது சிறுவன் பலி!

Webdunia
சனி, 27 செப்டம்பர் 2008 (18:35 IST)
புதுடெல்லியில் மெஹ்ரவ்லி பூ சந்தை அருகேயுள்ள கடையில் இன்று நண்பகலில் குண்டு வெடித்தது. இதில் 13 வயதுச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் டிபன்-பாக்ஸில் வெடிகுண்டை வைத்து விட்டுச் சென்றதாக சம்பவ இடத்தில் இருந்தவர்களை மேற்கோள்காட்டி அச்செய்திகள் கூறுகின்றன.

இத்தாக்குதலில் 17 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், அதில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தகவலறிந்த காவல்துறையினர் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தை முற்றுகையிட்டதுடன், மேலும் அப்பகுதியில் ஏதாவது குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

Show comments