Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

Webdunia
வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (13:40 IST)
தலைநகர் டெல்லியில் கடந்த சனியன்று தொடர் குண்டு வெடிப்புகள் நடந்துள்ள நிலையில், 2 தீவிரவாதிகள் சிறப்பு காவல்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட அபு பஷாரை நேற்று டெல்லிக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், அவனிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் தாங்கள் ஜமியா நகர் பகுதியில் கலிலுல்லா மசூதிக்கு அருகே 4 அடுக்குமாடிக் குடியிருப்பில் பதுங்கியிருந்ததை பஷார் ஒப்புக்கொண்டான்.

இதன் அடிப்படையில், பஷார் குறிப்பிட்ட குடியிருப்பு பகுதியில் இன்று சோதனை நடத்தியதாகவும், அப்போது அங்கு 5 தீவிரவாதிகள் பதுங்கி இருந்ததும் தெரியவந்ததாக சிறப்பு காவல்படையின் இணை ஆணைய‌ர் கர்னெய்ல் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதையடுத்து தீவிரவாதிகளுக்கும், சிறப்பு படையினருக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரம் தீவிர துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும் இதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 2 காவல்படையினர் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.

இறந்த தீவிரவாதிகளில் ஒருவன் அகமதாபாத், டெல்லி தொடர் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட அடிக் மற்றும் மற்றொருவன் அவனது கூட்டாளி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கிருந்த 3 தீவிரவாதிகளில் ஒருவரை காவல்படையினர் கைது செய்ததாகவும், மீதமுள்ள இருவர் தப்பி விட்டதாகவும் கர்னெய்ல் சிங் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments