Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திராயன்-1 ஆய்வுக்கலத்தை இன்று அறிமுகப்படுத்துகிறது இஸ்ரோ!

Webdunia
வியாழன், 18 செப்டம்பர் 2008 (16:25 IST)
சந்திரனை ஆய்வு செய்வதற்காக இந்தியா தயாரித்துள்ள ஆளில்லா விண்கலமான சந்திராயன்-1 ஆய்வுக் கலத்தை இன்று அறிமுகப்படுத்த இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ- ISR O) முடிவு செய்துள்ளது.

பி.எஸ்.எல்.வி ராக்கெட் உதவியுடன் ( Polar Satellite Launch Vehicl e- PSLV) விண்ணில் செலுத்தப்பட உள்ள சந்திராயன்-1 ஆய்வுக்கலம் நிலவின் சுற்றுப்புறத்தை ஆய்வு செய்வதுடன், நிலவில் இறங்கி மண்ணின் மாதிரிகள், புகைப்படங்களை எடுக்கும் திறன் மிக்கது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மொத்தம் 2 ஆண்டுகள் சந்திரனை ஆய்வு செய்வதற்காக 83 மில்லியன் டாலர் செலவில் சந்திராயன்-1 ஆய்வுக்கலத்தை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இதன் எடை 590 கிலோ என்றும், சந்திராயனுடன் நாசாவுக்கு தேவையான சில உபகரணங்களும் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலமாக விண்ணுக்கு அனுப்பப்படுகிறது என்றும் இஸ்ரோ தகவல்கள் கூறுகின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

Show comments