Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் தொடர் குண்டு வெடிப்பு: 18 பேர் பலி! 80 பேர் காயம்!

Webdunia
சனி, 13 செப்டம்பர் 2008 (20:29 IST)
தலைநகர் டெல்லியின் மையப் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் அடுத்தடுத்து 5 இடங்களில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்துள்ளது. இதில் 18 பேர் பலியாகியுள்ளனர். 80 பேர் காயமுற்றுள்ளனர்.

முதலில் கரோல் பாக்கில் உள்ள கஃபார் சந்தைப் பகுதியில் வெடித்தது. இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ வாகனத்தில் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கன்னாட் பிளேஸ், கிரேட்டர் கைலாஸ் ஆகிய இடங்களில் குண்டுகள் வெடித்தன.

கன்னாட் பிளேஸ் என்ற இடத்தில் இரண்டு இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளதாக கடைசி செய்திகள் தெரிவிக்கின்றன. இவைகள் தவிர பர்காம்பா சாலையில் குண்டு வெடித்துள்ளது.

காயமடைந்தவர்கள் அனைவரும் இராம் மனோகர் லோகியா உள்ளிட்ட பல மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென செய்திகள் கூறுகின்றன.

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

Show comments