Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜம்மு நிலவரம்: பிரதமர் ஆலோசனை!

Webdunia
சனி, 16 ஆகஸ்ட் 2008 (15:08 IST)
புதுடெல்லி: அமர்நாத் கோயிலுக்கு நிலம் ஒதுக்கிய விவகாரம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்து வரும் வன்முறைகள் குறித்து பிரதமர் மன்மோகன்சிங் இன்று ஆலோசனை நடத்தினார்.

அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜ ி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி உள்ளிட்டோருடன் புதுடெல்லியில் இன்று காலை தீவிர ஆலோசனை நடத்திய பிரதமர ், அமர்நாத் நில ஒதுக்கீடு விவகாரத்தில் இரு தரப்பும் ஏற்கும் வகையில் தீர்வு கொண்டு வருவது குறித்து விரிவாக விவாதித்தார்.

முன்னதா க, இதே பிரச்சனைக்காக புதுடெல்லியில் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு நேற்றிரவு கூடி விவாதித்தது.

ஜம்மு - காஷ்மீரில் நிலவும் தற்போதைய சூழல் பற்றியும ், இப்பிரச்சனைக்கு ஆக்கப்பூர்வ தீர்வு காண்பது குறித்தும் முன்னாள் முதலமைச்சர் குலாம்நபி ஆசாத் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் சைபுதீன் சோஸ் ஆகியோருடன் அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆலோசனை நடத்தினார்.

இதேபோல ், சுதந்திர தினத்தை ஒட்டி புதுடெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மன்மோகன்சிங் ஆற்றிய உரையிலும ், ஜம்மு - காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார் என்பது நினைவு கூறத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

Show comments