Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜம்முவில் கலவரம் நீடிப்பு: துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி

Webdunia
செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (12:05 IST)
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பந்திப்போரா என்ற இடத்தில் இன்று காலை காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கலவரக்காரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் காயம் அடைந்தனர்.

அமர்நாத் நில பிரச்சினை தொடர்பாக வன்முறையாளர்கள் மீது காவல்துறையினர் நேற்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஹூரியாத் மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த ஷேக் அஜீஸ் மற்றும் 3 கலவரக்காரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து நேற்று முதல் காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அமர்நாத் கோயில் வாரியத்திற்கு நிலம் வழங்கிய உத்தரவை ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் திரும்பப் பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் வெடித்தது.

இப்பிரச்சினையில் காஷ்மீர் மாநிலத்திற்கு பொருட்கள் கொண்டு செல்வதை தடுப்பதற்காக ஹூரியாத் மாநாட்டுக் கட்சியினர் முயற்சித்த போது, அவர்களைத் தடுத்து நிறுத்தி காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பந்திப்போரா பகுதியில் கலவரக்காரர்கள் இன்றும் போராட்டம் நடத்தியதால், காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இதற்கிடையே வன்முறை நீடிப்பதைக் கருத்தில் கொண்டு ஜம்மு-காஷ்மீர் மாநில அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு ஜம்முவில் நடைபெறுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

Show comments