Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குருவாயூர் கோவிலுக்கு வங்கி மூலம் காணிக்கை!

Webdunia
செவ்வாய், 22 ஜூலை 2008 (10:39 IST)
கேரளாவில் அமைந்துள்ள குருவாயூர் கோவிலுக்கு வங்கி மூலம் நேரடியாக காணிக்கை செலுத்தும் வசதியை செளத் இந்தியன் வங்கி துவக்கியுள்ளது.

கேரளாவில் புகழ் பெற்ற கோவிலான குருவாயூரில் அமைந்துள்ள குருவாயூரப்பனுக்கு இந்தியாவிலும் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலும் பக்தர்கள் உள்ளனர். இவர்கள் செளத் இந்தியன் வங்கியின் இணைய பணபரிமாற்ற சேவை மூலம் கோவிலுக்கு நேரடியாக காணிக்கை செலுத்தும் வசதி திருச்சூரில் தொடங்கி வைக்கப்ட்டது.

குருவாயூர் தேவஸ்தான கமிட்டியின் சேர்மன் தோட்டாதில் ரவீந்திரன், செளத் இந்தியன் வங்கி மூலம் காணிக்கை செலுத்தும் சேவையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும் போது, இந்த வசதி ராமாயன மாதத்தின் முதல் நாளில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த வங்கி மூலம் செலுத்தும் காணிக்கைக்கு வங்கி கட்டணம் இலவசம் என்று கூறினார்.

செளத் இந்தியன் வங்கியின் செயல் இயக்குநர் எம். வால்சன் பேசுகையில், வங்கி மூலம் நேரடியாக பணம் செலுத்துவாதல், உங்கள் காணிக்கை குருவாயூர் கோவிலுக்கு நேரடியாக செலுத்தப்படுகிறது. இதில் எந்த முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. எங்கள் வங்கி கூடிய விரைவில் 511 கிளைகள் மூலம் “ வழிபாட ு “ சேவைக்கும் முன்பதிவு சேவையை துவக்க உள்ளது என்று தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி குறித்து விமர்சனம் செய்வதா? ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆ ராசா கண்டனம்..!

இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல்.. லெபனானில் பெண்கள் உள்பட 492 உயிரிழப்பு..

யுகேஜி படிக்கும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை.. என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற போலீஸ்..!

சென்னையில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த மழை: அதிகபட்சமாக மழைப் பதிவு எங்கே?

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம்! பள்ளிக்கல்வித்துறை..!

Show comments