Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்டவாளத்தில் குண்டு: தப்பியது மங்களூர் எக்ஸ்பிரஸ்!

Webdunia
சனி, 19 ஜூலை 2008 (17:49 IST)
கேரள மாநிலம் தலச்சேரி அருகே ரயில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டை தக்க சமயத்தில் அகற்றியதால், மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் பாதுகாப்பாக சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலச்சேரி அருகே உள்ள புன்னூல் என்ற இடத்தில் இருந்த நாட்டு வெடிகுண்டை பார்த்த ரயில்வே ஊழியர் உடனடியாக அதுகுறித்து ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் அளித்தார்.

இதையடுத்து ரயில்வே காவல்துறையினர் காலை 10 மணியளவில் நாட்டு வெடிகுண்டை தண்டவாளத்தில் இருந்து பாதுகாப்பாக அகற்றினர்.

முன்னதாக சென்னையில் இருந்து மங்களூர் நோக்கிச் சென்ற மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில், தலச்சேரிக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டது. வெடிகுண்டு அகற்றப்பட்ட பின்னர் மீண்டும் மங்களூர் ரயில் பாதுகாப்பாக பயணித்ததாக ரயில்வே காவல்துறையினர் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

Show comments