Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனவர் பிரச்சனை: ‌சி‌றில‌ங்க தூதரை எச்சரித்தது மத்திய அரசு!

Webdunia
சனி, 19 ஜூலை 2008 (14:47 IST)
‌ த‌‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் ‌மீது தா‌க்குத‌ல் நட‌த்‌தி வரு‌ம் ‌சி‌றில‌ங்க கட‌ற்படையை க‌ண்டி‌த்து தி.மு.க. இன்று நடத்திய உண்ணாவிரதத்தின் எதிரொலியாக, டெல்லியில் உள்ள ‌சி‌றில‌ங்கா தூதரை மத்திய அரசு எச்சரித்துள்ளது.

தமிழக மீனவர்கள் மீது அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வரும் ‌சி‌றில‌ங்க கடற்படையினரை கண்டித்து, இன்று தி.மு.க சா‌ர்‌பி‌ல் மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடைபெ‌ற்று வரு‌கிறது.

இதன் எதிரொலியாக, டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான ‌சி‌றில‌‌ங்க தூதரை அழைத்து பேசிய மத்திய அரசு, ‌சி‌றில‌ங்க கடற்படையினர் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளது.

மேலும், தமிழக மீனவர்கள் விஷயத்தில் மனிதாபிமான முறையில் ‌சி‌றில‌ங்க கடற்படையினர் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவரிடம் மத்திய அரசு வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், தமிழக மீனவர்கள் பிரச்சனையை மத்திய அரசு நேரடியாக ‌சி‌றில‌ங்க உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

Show comments