Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுக்கு ஆதரவு: மதச்சார்பற்ற ஜனதா தளம் நாளை முடிவு

Webdunia
சனி, 19 ஜூலை 2008 (13:26 IST)
புதுடெல்லி, ஜூலை 19, மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை ஆதரிப்பது குறித்து முடிவெடுப்பதற்காக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டம் பெங்களூருவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருக்கிறது.

என்றாலும், தமது கட்சியின் முடிவு குறித்து அதன் தலைவர் தேவேகவுடா எந்த தகவலையும் கூற மறுத்து விட்டார்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு தேவேகவுடா உட்பட 3 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர்.

பிரதமர் மன்மோகன் சிங், நேற்று தேவேகவுடாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அரசுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்நிலையில், தேவேகவுடா இன்று புதுடெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசவுள்ளார்.

புதுடெல்லியில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த தேவேகவுடா, அரசுக்கு ஆதரவு அளிப்பதற்கு முன், அதுபற்றி தமது கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று கூறினார்.

மத்திய அரசுக்கு ஆதரவளிக்கும் விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரத்தை தேவேகவுடாவிற்கு அக்கட்சி வழங்கியுள்ளது.

அரசுக்கு ஆதரவளிப்பதில் எந்த முடிவை எடுத்தாலும், அது மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நலன் கருதியே இருக்கும் என்றார் தேவேகவுடா.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

Show comments