Webdunia - Bharat's app for daily news and videos

Install App

280 எம்.பி.க்கள் ஆதரவு கிடைக்கும்: மொய்லி!

Webdunia
சனி, 19 ஜூலை 2008 (12:20 IST)
மக்களவையில் 22ஆம் தேதி நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு 280க்கும் அதிகமான எம்.பி.க்களின் ஆதரவு கிடைக்கும் என காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் வீரப்ப மொய்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்றிரவு செய்தியாளர்களிடம் பேசிய போது இதனைத் தெரிவித்த அவர், இந்த செய்தி பா.ஜ.க, இடதுசாரி கட்சிகளுக்கு கசப்பானதாக இருக்கும் என்றார்.

ஐ.மு.கூட்டணிக்கு ஆதரவாக உள்ள எம்.பி.க்களின் துல்லியமான எண்ணிக்கை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதற்கான பதிலை 22ஆம் தேதிக்கு பின்னர் அறிந்து கொள்வீர்கள் என்று மழுப்பலாக பதிலளித்தார்.

கர்நாடகா, ஹரியானா மாநில காங்கிரஸ் எம்.பி.க்களில் சிலர் கட்சிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்தி குறித்து கேட்டதற்கு, கட்சி எம்.பி.க்கள் அனைவரும் ஓர் அணியில் திரண்டுள்ளதால், கட்சி மேலிடம் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் வெற்றி பெறும் என மொய்லி நம்பிக்கை தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

Show comments