Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பி‌‌ரீ‌மிய‌ம் பெட்ரோலை விற்க பெட்ரோல் நிலைய அதிபர்கள் எதிர்ப்பு!

Webdunia
வியாழன், 26 ஜூன் 2008 (12:13 IST)
மலிவு விலை பெட்ரோலுக்கு பதிலாக அதிக விலை பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விற்குமாறு எண்ணெய் நிறுவனங்கள் வற்புறுத்தினால் அதிக விலை பெட்ரோல், டீசல் விற்பதையே நிறுத்தி விடுவோம் என்று அனைத்திந்திய பெட்ரோல் வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு கூறியுள்ளது.

இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான ஐ.ஓ.சி. பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் ஆகிய பெட்ரோல் நிறுவனங்கள் 300 கிலோ லிட்டர்கள் விலை உயர்‌ந்த ‌பி‌ரீ‌‌மிய‌ம் பெட்ரோல், டீசல்களை பெட்ரோல் நிலையங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றன.

இது குறித்து அனைத்திந்திய பெட்ரோலிய வியாபாரிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் அசோக் பத்வார் கூறுகையில், விலை உயர்ந்த பெட்ரோல், டீசலை குறைந்தது 50 விழுகாட்டாவது பெட்ரோல் நிலையங்கள் விற்கவேண்டும் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தி வருகிறது. ஆனால் சாதாரண எரிபொருளைக் காட்டிலும் இந்த பிராண்டட் எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை விலை அதிகமாக உள்ளது. வாடிக்கையாளர்களை நாம் இந்த பெட்ரோலைத்தான் வாங்கவேண்டும் என்று நிர்பந்திக்க முடியாது என்று கூறினார்.

மத்திய பெட்ரோலிய, இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் முரளி தியோராவை சந்தித்த பிறகு அசோக் பத்வார் இதனை தெரிவித்தார்.

இது குறித்து பொதுத்துறை நிறுவன அதிகாரிகளை அழைத்து பேசி ஒரு சுமுகமான தீர்வை எட்டலாம் என்று முரளி தியோரா நம்பிக்கை அளித்துள்ளதாக் அசோக் பத்வார் கூறினார்.

இதற்கு ஒரு தீர்வை மத்திய அரசு எட்டவில்லையெனில் ‌பி‌‌ரீ‌மிய‌ம் பெட்ரோல், டீசல் விற்பனையை முழுதும் நிறுத்தவேண்டிவரும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

Show comments