Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்பேசி கதிர்வீச்சு - அரசு எச்சரிக்கை!

Webdunia
திங்கள், 16 ஜூன் 2008 (16:25 IST)
செல்பேசியைப் பயன்படுத்தும்போது வெளியாகும் மின்காந்த அலைகளால் மூளையிலுள்ள திசுக்களில் பாதிப்புகள் ஏற்படும் என்று மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள தனது பரிந்துரைகளில் எச்சரித்துள்ளது.

இதனால் செல்பேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களது செல்பேசி விளம்பரங்களில் கருத்தரித்த பெண்கள், குழந்தைகள் ஆகியோர் செல்பேசியைப் பயன்படுத்துவது போல் காண்பிப்பதை தவிர்க்கவேண்டும் என்று தொலைத் தொடர்பு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதாவது குழந்தைகள், கருத்தரித்த பெண்கள், இருதய நோய் உள்ளவர்கள் செல்பேசிகளை குறைந்த அளவில் பய‌ன்படுத்தவேண்டும் என்று தொலைத் தொடர்பு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

குறிப்பாக 16 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர்கள் செல்பேசியை பயன்படுத்தும்போது, அவர்களது மென்மையான மூளைத் திசுக்கள் பாதிப்படையலாம் என்று தொலைத் தொடர்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

Show comments