Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிஷன் கங்கா, ஓரி : இந்தியா – பாக். பேச்சுவார்த்தை!

Webdunia
சனி, 31 மே 2008 (17:00 IST)
சீனாப் நதியின் மீது இந்தியா கட்டியுள்ள கிஷன் கங்கா மற்றும் ஓரி இரண்டு ஆகிய அணைகள் கட்டியது தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றன.

லாகூர் நகரில் இன்று நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியாவின் சிந்து நதி நீர்ப் பகிர்வு ஆணையர் ஜி. அரங்கநாதன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு, பாக்.கின் சிந்து நதி நீர்ப் பகிர்வு ஆணையர் சையது ஜமாத் அலி ஷா தலைமையிலான குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பக்ளிஹார் அணைப் பிரச்சனைக்கு சர்வதேச நிபுணர் அளித்த ஆலோசனையின்படி தீர்வு எட்டப்படும் நிலை உள்ளதால், இந்தப் பேச்சுவார்த்தையில் அப்பிரச்சனை விவாதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 4ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையில் கிஷன் கங்கா மற்ற ு‌ம் ஓரி இரண்டு ஆகிய இரண்டு பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments