Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரப்ஜித் விவகாரத்தில் பின்னடைவு!

Webdunia
புதன், 14 மே 2008 (12:37 IST)
பாகிஸ்தானில் தூக்கு தண்டனை பெற்ற இந்தியரான சரப்ஜித் சிங்கின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கூடாது என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக செய்தி ஊடகம் ஒன்று கூறியுள்ளது.

பாகிஸ்தானில் புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சரவை மரண தண்டனையை முற்றிலும் அகற்றி அதனை ஆயுள் தண்டனையாக குறைக்கும் சட்டத்தை அமல்படுத்தவுள்ளதாக முன்பு கூறப்பட்டது.

பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் நடத்திய உயர்மட்ட கூட்டம் ஒன்றில் சரப்ஜித் சிங் விவகாரம் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வெளியுறவு அமைச்சக அதிகாரிகள், சட்ட மற்றும் மனித உரிமை அமைச்சக அதிகாரிகள் பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அப்போது சரப்ஜித் சிங் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தால், அது தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக அமையும் என்ற கருத்தை உள்துறை அமைச்சகம் எழுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜினாமா செய்கிறாரா நெல்லை மேயர்? திமுக கவுன்சிலர்கள் மத்தியில் பரபரப்பு..!

புதிய குற்றவியல் சட்டம் நேற்று அமல்.. இன்று தமிழ்நாட்டில் முதல் வழக்குப்பதிவு..!

மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை.. அவை குறிப்பில் இருந்து நீக்கம் குறித்து ராகுல் கருத்து..!

ராகுல்காந்தி விளம்பரத்துக்காக பண்றார்.. 40 தமிழக எம்.பிக்களும் வேஸ்ட்! – தமிழிசை சௌந்தர்ராஜன் ஆவேசம்!

பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலையான சிலம்பம் கற்பது தற்போது அவசியம்!

Show comments