Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏவுகணைத் திட்டத்தி‌ற்கு தலைமையே‌ற்ற முதல் பெண்மணி!

Webdunia
செவ்வாய், 13 மே 2008 (16:06 IST)
இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் பணியாற்றும் 45 வயது பெண்மணி டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அணுத் திறன் ஏவுகணைத் திட்டத்தின் தலைவர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏவுகணைத் திட்டத்தின் இந்த தலைமைப் பொறுப்பிற்கு முதன் முதலாக ஒரு பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 3000 கிமீ. இலக்குகளை சென்று தாக்கும் அக்னி ஏவுகணைத் திட்டத்தில் உதவி திட்ட இயக்குனராக இருந்து வரும் டெஸ்ஸி தாமஸ் அணுத்திறன் வாய்ந்த அக்னி ஏவுகணைத் மேம்பாட்டுத் திட்டத்தில் திட்ட இயக்குனராக நிமிக்கப்பட்டுள்ளார்.

அக்னி திட்டத்தில் உள்ள அனைவரையும் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று கவுரவித்தார். இந்த திட்டம் குறித்து டெஸ்ஸி தாமஸ் கூறுகையில் "இதுவும் ஒரு ரகசியமான திட்டம்தான், இது அக்னி-2 என்று அழைக்கப்படுகிறது. தேசத்தின் பாதுகாப்பில் எனது பங்கு இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு..!

கவிதாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி! நீதிமன்றக் காவலில் சிறையிலடைப்பு

காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!

நடிகை ஸ்ரீலீலாவை சென்னைஸ் அமிர்தா குழும தலைவர் பூமிநாதன் பிராண்ட் அம்பாசிடராக அறிவித்தார்!

கோழிச் சில்லியில் குருணை மருந்தை கலந்து கொடுத்த கொடூரம்! துடிதுடித்து இறந்த நாய், பூனைகள்..

Show comments