Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலை விபத்தில் பலியானவர்கள் உடல் நாளை இந்தியா வரு‌கிறது!

Webdunia
செவ்வாய், 13 மே 2008 (12:29 IST)
அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவில் சனிக்கிழமையன்று சாலை விபத்தில் பலியான 6 இந்தியர்களின் உடல்கள் நாளை இந்தியா வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான தூதரக நடைமுறைகள் புதன்கிழமை எந்த வித சிக்கல்களும் இன்றி நிறைவடையும் என்று இந்திய தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமையன்று பென்சில்வேனியாவில ் இரு‌ந்து நயாகரா நீர்வீழ்ச்சிக்கு கௌஷிக் தேவ் (26), மனோஜ் ஜாரியா (35), மிலி ஜாரியா (28), நிதின் அகர்வால் (29), ஸ்வாதி அகர்வால் (25), ஷுபம் சௌத்ரி (24) ஆகியோர் மினி வேனில் சென்று கொ‌ண்டிரு‌ந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் உருண்டு மற்றொரு காரில் மோதியது. இ‌தி‌ல் 6 பேரு‌ம் ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயே ப‌லியானா‌‌ர்க‌ள்.

விபத்திற்கான சரியான காரணம் குறித்து விசாரித்து வரும் காவல்துறையினர், மினிவேனை ஓட்டியவர் மது அருந்தியிருந்தாரா என்பதை பரிசோதனை செய்ய உ‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு..!

கவிதாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி! நீதிமன்றக் காவலில் சிறையிலடைப்பு

காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!

நடிகை ஸ்ரீலீலாவை சென்னைஸ் அமிர்தா குழும தலைவர் பூமிநாதன் பிராண்ட் அம்பாசிடராக அறிவித்தார்!

கோழிச் சில்லியில் குருணை மருந்தை கலந்து கொடுத்த கொடூரம்! துடிதுடித்து இறந்த நாய், பூனைகள்..

Show comments